Tuesday, July 3, 2012

Sunday, September 4, 2011

அப்படி என்னசெய்கிறது
என் பார்வை
என்கிறாய் சாதரணமாக
நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
நினைத்ததைக் கிறுக்கும் குழந்தையாய்.
என் பார்வையில்
மறைந்தும் தெரிந்தும் விளையாடுகிறாய்
தேடலில் தொலைகிறேன் நான்.

மழைக்காலம்

ஒரு மழைக்காலத்தில்
நீ நின்றிருந்த நிறுத்தத்தில் நானும்
நெடுநேரக் காத்திருப்பிற்குப்பின்
வந்த இடியையடுத்து
அறிமுகப்படுத்திக்கொண்டோம்
அதற்குப்பின் ஆரம்பித்தது
ஓயாத மழையொன்று.

************************************************************

ஒவ்வொரு மழைக்காலத்திலும்
குடையை மறந்த நாட்கள்
நினைவுபடுத்தும்
அவளின் தாவணியை.

************************************************************

உன்னை நனைக்கும் ஆசையில்
நீ குடையெடுத்த நாட்களில்
பெய்வதில்லை மழை.

************************************************************

ஒவ்வொரு மழைக்காலமும்
கிண்டல்செய்கின்றன
உன்னுடன் நடக்கையில்
குடைக்குள்ளும் நனைந்ததுபற்றி.

************************************************************

எதிர்பாராத மழையால்
முழுவதுமாய் நனைந்திருந்தாய்
முன்பைவிடவும் உன்னை அழகாக்கிய
மழையைத் திட்டியபடி
தலைதுவட்டச்சென்ற
உன் கால்தடங்களில் நடைபழகவே
ஒளித்துவைக்கவெண்டும் உன் குடையை.

************************************************************

நீ வந்துசென்ற
நாட்களை நினைவுபடுத்தும்
நிறம் மங்கிய மருதாணி.
இனிப்பை மறைத்து எடுத்துச்செல்லும்
குழந்தையைப்போல் உணர்கிறேன்
கூட்டத்தில்
நம் பார்வை சந்திக்கும்போது.
உன்னை எனக்கு
அறிமுகம் செய்தது இசை
அதன் பின்
நம் சந்திப்புகள் அறிந்துகொண்டன
மௌனத்தை.