Sunday, September 4, 2011

மழைக்காலம்

ஒரு மழைக்காலத்தில்
நீ நின்றிருந்த நிறுத்தத்தில் நானும்
நெடுநேரக் காத்திருப்பிற்குப்பின்
வந்த இடியையடுத்து
அறிமுகப்படுத்திக்கொண்டோம்
அதற்குப்பின் ஆரம்பித்தது
ஓயாத மழையொன்று.

************************************************************

ஒவ்வொரு மழைக்காலத்திலும்
குடையை மறந்த நாட்கள்
நினைவுபடுத்தும்
அவளின் தாவணியை.

************************************************************

உன்னை நனைக்கும் ஆசையில்
நீ குடையெடுத்த நாட்களில்
பெய்வதில்லை மழை.

************************************************************

ஒவ்வொரு மழைக்காலமும்
கிண்டல்செய்கின்றன
உன்னுடன் நடக்கையில்
குடைக்குள்ளும் நனைந்ததுபற்றி.

************************************************************

எதிர்பாராத மழையால்
முழுவதுமாய் நனைந்திருந்தாய்
முன்பைவிடவும் உன்னை அழகாக்கிய
மழையைத் திட்டியபடி
தலைதுவட்டச்சென்ற
உன் கால்தடங்களில் நடைபழகவே
ஒளித்துவைக்கவெண்டும் உன் குடையை.

************************************************************

No comments:

Post a Comment